Saturday 16 January 2010

பானையில் பால் பொங்குவதல்லப் பொங்கல்

-சூர்யா-
பானையில் பால் பொங்குவதல்லப் பொங்கல்
உள்ளத்தில் நன்றி பொங்கி எழுவதே பொங்கல்
நன்றி எப்பவும் எங்கும் பொங்கிட வேணும்
நன்றி பொங்கிடவேணும் இந்த நானிலத்தில்
செய்நன்றி கொன்றவனுக்கு உய்வில்லை
நன்றி மறந்தார்க்கு வாழ்வில்லை - அது
பொய்யாமொழி தந்த தமிழனின் சத்தியவாக்கு
சோற்றில நாம் தினம் கைவைக்க
சேற்றில் கைவைத்தவனுக்கு கூறு நன்றி
பால் தந்து தயிர் ஆகி இனிய மோராகும்
கால் நொந்தாலும் அயராது உழைப்பைத் தரும்
அந்தக் கோவினத்திற்கு கூறு தினம் நன்றி
கதிரறுத்துப் பொங்க வைக்கிறோம் - அந்தக்
கதிரவனுக்கு என்றும் கூறு கோடி நன்றி
அடியில் நெருப்பை வைத்து எரித்தாலும்
கலங்காது இந்தப்பானை பால் வார்க்கும்
பானைக்கும் இதை வார்த்தவனுக்கும் கூறு நன்றி
துயர் பொங்கிவரினும் கலங்காது கூறு நன்றி

No comments:

Post a Comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.