Saturday 24 October 2009

இல்லறமே நல்லறம்

அருளுரை: தவத்திரு. ரெங்கராஜ தேசிக சுவாமிகள்

சருகருத்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள்
சருகருத்தில் தேகங்குன்றிச் சஞ்சலமுண் டாகுமே
வருவிருந்தோடு உண்டு உடுத்தி வளர்மனை சுகிப்பிரேல்
வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்குஞ் சிவாயமே.
- மகான் சிவவாக்கியர் பாடல் - கவி 532.



இப்பாடலின் சாரம்

இயற்கை படைப்புகளில் மனித வர்க்கமே சிறந்ததாகும். மனிதனுக்குள் எல்லாம் வல்ல இயற்கை அன்னை, சொர்க்கத்தையும், நரகத்தையும் வைத்திருக்கிறாள். நரகமாகிய மும்மலதேகம் துணைகொண்டுதான் சூட்சும தேகமாகிய ஒளிஉடம்பு பெறமுடியும். எல்லாம் வல்ல இயற்கை அன்னை பெறுதற்கரிய மானுட தேகம் தந்ததே, இல்லறத்தில் இருந்து விருந்தை உபசரித்தும், மனைவி, மக்கள், தாய், தந்தை மற்றும் உறவினர்கள் துணையோடு நித்தமும் காலையிலும், மாலையிலும் "ஓம் அகத்தீசாய நம" என்று நாமஜெபம் செய்து, ஆசான் அகத்தீசன் ஆசி பெறுவதற்கே.

காம விகாரம் தணிதற்கு மனைவி அவசியம். காம விகாரம் தணியாமல் மனம் ஒருநிலைப்படாது. எப்பொழுதும் மனம் போராட்டமாகவே இருக்கும். தியாமும் செய்ய முடியாது. இல்லறத்தில் இருந்தால்தான் நமக்கு எந்த உணவு உடம்பிற்கு ஒத்துக்கொள்ளுமோ அந்த உணவை மனைவி சமைத்துத் தருவாள். அது மட்டுமல்லாமல் ஏழை எளியவர்களுக்கு பசியாற்றவும் துணையாக இருப்பாள். தாய் தந்தைக்கு செய்யக்கூடிய கடமைக்கும் துணையாக இருப்பாள். மனம் தளர்ச்சி அடையும்பொழுது பிள்ளைகளைத் தொடுதலாலும், அவர்களது மழலைச்சொல் கேட்பதாலும் மனம் ஆறுதல் அடையும். மேலும் தகுதியுள்ள நண்பர்களை வீட்டிற்கு அழைத்து அவர்கள் மகிழும்படியாக உணவுவகைகள் கொடுத்து, நட்பை பெருக்கவும் அவள் துணை இருக்க வேண்டும். தகுதியுள்ள இல்லறத்தான் தான் கடவுளை அடையமுடியும்.

ஒருவன் கடவுள் தன்மை அடையவேண்டுமென்றால் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகலாம். வினை காரணமாக கூடும் அல்லது குறையும். ஆகவே வாழ்க்கையின் நிலை உணர்ந்து மக்கள், இருக்கக்கூடிய இல்லறத்தையும் மற்றும் உள்ள சுற்றுப்புறச் சூழ்நிலையையும் நன்கு பயன்படுத்தி, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக்கொள்வார்கள். ஆகவே, நித்திய கடமைகளை சலிப்பில்லாமல் செய்துவரவேண்டும். பொருள் ஈட்டுதல், நற்காரியங்களுக்குச் செலவு செய்தல் போன்ற பொருளின் இயல்பை அறிந்து (நிலையில்லாத பொருளைப் பெற்றால் நிலையான அறத்தைச் செய்துகொள்ள வேண்டும்) செயல்படுவார்கள்.இதையெல்லாம் உணராத சிலர், மனைவி மக்களை விட்டுவிட்டு அனைத்தும் பொய் என்று வீண் கற்பனை செய்துகொண்டு, அருவிகள் உள்ள மலையடிவாரத்தில் தங்கி பச்சை காய்கறி இலைதழைகளைப் பறித்தால் பாவம் வரும் என்று எண்ணி, மரத்தில் இருந்து உதிரக்கூடிய சருகுகளை மட்டும் உண்டு அருவியில் வருகின்ற தண்ணீரைக்குடித்தும், தவத்தைச் செய்ய நினைப்பார்கள். சருகையும் தண்ணீரையும் சாப்பிட்டால் ஜீரணமாகாது வயிற்றில் தங்கிவிடும், மலச்சிக்கல் ஏற்படும் மனித வர்க்கத்திற்கென்றே உணவு வகைகள் இருந்தும் அதைப்பற்றி அறியாது வெறும் சருகைத்தின்றால் கிட்டத்தடட் 15 அல்லது 20 நாட்கள் அல்லது 1 மாதம் தான் அவர்களால் உயிரோடு இருக்கமுடியும். இப்படி அநியாயமாக சாவதற்காகத் தவம் செய்வதில்லை. வாழ்வதற்காகத்தான் தவம் செய்யவேண்டும். ஆகவே உடம்பின் இயல்பைப்பற்றியும், உணவின் அவசியத்தைப்பற்றியும் நன்கு உணர்ந்தவர்கள் இப்படி ஊர்ஊராகச் சுற்றிக் காலத்தை வீணாக்கமாட்டார்கள்.

ஆகவே, ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டுமென்றால், உடம்பின் இயல்பையும் உடலைக் காப்பாற்றிக் கொள்ள உணவின் இயல்பையும் அறிந்து நித்திய கடமைகளைச் செய்தும், ஆசான் அகத்தீசரை தியானம் செய்தும் முக்தி பெறுவார்கள்.

எ.கா
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
இல்வாழ்க்கை - குறள் 47.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்.
இல்வாழ்க்கை - குறள் 46.



குறிப்பு
1. உடம்பின் இயல்பை அறிந்து, இல்லறத்தைச் செம்மையாக நடத்தியும், விருந்தை உபசரித்தும் மற்றும் அறப்பணிகளைச் செய்து வந்தால், தலைவனைத் தேடி நாம் போகவேண்டியதில்லை. தலைவன் நம்மை நோக்கி வருவான்.

2. சிலபேர் பச்சைக் காங்கறிகளைத் தின்றால் உடம்புக்கு பலவகையான சத்துக்கள் கிடைக்கும் என்பார்கள். வேகவைத்த உணவு வகைகளைச் சாப்பிடும் பொழுதே அஜீரணக்கோளாறு ஏற்படுகிறது. மனித வர்க்கத்திற்கே வேகவைத்த உணவுதான் உடம்புக்கு நல்லது என்று முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கின்றார்கள். இடையில் சிலபேர் உணவு பழக்கவழக்கங்கள் அறியாது பச்சைக்காய்கறிகள் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது என்று சொல்வார்கள். பாவம் அவர்கள் சாப்பிடட்டும், குற்றமில்லை. மற்றவர்களுக்குச் சொல்லாதிருப்பதே புண்ணியமாகும்.

3. ஒருவன் கடவுள் தன்மை அடையவேண்டுமென்றால், உடம்பைப்பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். அறிந்தவர்கள்தான் இந்த உடம்பை கடவுளால் கொடுக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதமாக எண்ணுவார்கள். அவர்கள்தான் காமத்தை மலரினும் மென்மையானது என்று உணர்வார்கள். உணர்ந்து தன் உடம்பை காப்பாற்றிக்கொள்வார்கள். அப்படி உடம்பை காப்பாற்றிக் கொண்டவர்கள்தான் ஒளி உடம்பு பெறுவார்கள். ஒளி உடம்பு பெற்றவர்கள் கோடானுகோடி யுகம் வாழ்வார்கள். அவர்கள் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலும் செய்வார்கள். எல்லாம் வல்ல இயற்கை உயிரினங்களை தோற்றுவித்தல், வாழ்வித்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலை மட்டும்தான் செய்ய முடியும். ஆனால் இயற்கையை வென்றவர்களோ ஐந்தொழிலும் செய்வார்கள். இதையெல்லாம் நாம் அறியவேண்டுமானால் ஐந்தொழிலும் நினைத்தமாத்திரத்தில் செய்யக்கூடிய வல்லமையுள்ள ஆசான் அகத்தீசரைப் பூஜிக்க வேண்டும். பூஜிக்க பூஜிக்க தன்னைப்பற்றி உணரக்கூடிய அறிவு வரும். தனக்குள்ளே இருக்கும் பகைமையையும்(மும்மலம்), நட்பையும்(ஒளி உடம்பு) அறிய முடியும். அறிந்து பகைமையை நீக்கி நட்பாகிய ஞானதேகம் பெறலாம். இதுவே வீடுபேறு ஆகும்.

4. உடம்பின் இயல்பை அறியாதவர்கள் விந்து விட்டால் நொந்து விடுவான் என்று சொல்வார்கள். அது யோகிக்கே உரிய வித்தைகள் ஆகும். இவை புரியாது விந்து விடக்கூடாது என்று மனைவியை புறக்கணிப்பார்கள். இது திருமணம் செய்வதற்கு முன்பே இந்த புத்தி இருக்க வேண்டும். திருமணம் செய்துவிட்டு மனைவியை புறக்கணித்தால் ஆன்மீக நரகத்தில் சேர்வார்கள். விந்துவாகிய சுக்கிலம் உடம்பில் தேங்கினால் கொழுப்பு மண்டிவிடும். இரத்த சுத்தி ஏற்படாது. உடல் ஆரோக்கியம் இருக்காது. உடல் உஷ்ணம் அதிகமாகும். மேலும் மூளையும் வேலை செய்யாது. எனவே உடம்பைப் பற்றி அறிந்தவர்கள் இல்லறத்திலிருந்து உடம்பைப் பொன் உடம்பாக்கி கொள்வார்கள்.

போலி ஆன்மீகவாதிகளின் செயல்

அறிவு தெளிவில்லாத போலி ஆன்மீகவாதிகள் நல்லதொரு இல்லறத்தானை அழைத்து மனைவியிடம் கூடாதே, பந்தபாசம் ஆகாது என்பார்கள். அவன் பாவ புண்ணியம் இல்லை என்று சொல்பவனைவிட கொடுமையானவன். எனவே, அதுபோன்ற ஆன்மீகவாதிகளிடம் சென்றால் ஆன்மீக நரகம்தான் கிட்டும்.ஆன்மீக நரகம் என்பது கடவுள் நாட்டம் உள்ளவர்கள் உடல்கூறு தெரியாது பிராணயாமம் செய்தலும், பட்டினி கிடத்தலும் மற்றும் ஊர்ஊராய் சுற்றியும் அதனால் உடல் நலிவுற்று நோய்வாய்ப்பட்டு இறப்பதே ஆன்மீக நரகமாகும்.


எடுத்துக்காட்டு
மாதர்தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே மாதர்தோள் புணர்ந்தபோது மனிதர் வாழ்வு சிறக்குமே....
மகான் சிவவாக்கியர் பாடல்.

மகான் சட்டைமுனிநாதர் அவர்களின்
குருசூத்திரம் 20ல் - பாடல்கள் 17-18
அற்பமாம் மூடர் அறியாமல் யோகம்
சொற்பமாய் எண்ணி செய்தே மரித்தார்
கற்பம் இல்லாட்டால் காணுமோ ஞானம்
அற்பர் செய்யோகம் அழிம்பிது பாரே -17

பார்த்தே சிலநூல் பாடினதைக் கற்று
காத்தே அடைத்து கனயோகி என்று
சேர்த்தே சீசரைச் செய்து உபதேசம்
கூத்திது ஆகும் கூடாது முத்தியே -18

நல்ல வழியை நாடுவோம்


நல்ல வழிதனை நாடு - எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு
-கடுவெளித்சித்தர் பாடல்-

உலகத்திலேயே சிறந்தது அகத்தியர் சன்மார்க்க சங்கம்தான். அந்த சங்கத்தார்கள் காட்டுகின்ற பாதை மிகத் தெளிவானது. காரணம், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் நன்கு உணர்ந்தவர்கள் அகத்தியர் சன்மார்க்க சங்கத் தொண்டர்கள். இவர்கள் மனைவியிடம் அன்பு காட்டுவார்கள், தாய் தந்தையர்களை உபசரிப்பார்கள், உடன் பிறந்தவர்களுக்குப் பாதுகாவலனாக இருப்பார்கள், நல்ல நட்பைத் தேர்ந்தெடுத்து நட்பைப் பெருக்கிக்கொள்வார்கள், விருந்தை உபசரிப்பார்கள், தன்னால் முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்வார்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பொறாமை காரணமாக அல்லது அறியாமை காரணமாக இகழ்ந்து பேசினாலும் பொறுத்துக்கொள்வார்கள், ஜாதி மத துவேசம் பார்க்கமாட்டார்கள், சிறந்த முயற்சி உடையவராக இருப்பார்கள், மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக வீண் ஆரவார ஆடம்பரச் செலவுகள் செய்யமாட்டார்கள், மது அருந்துதல், சூதாடுதல் போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகமாட்டார்கள், தம் குடும்பம் நலம்பெறும் பொருட்டு சிறுதெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுப்பதைப் பாவம் என்று எண்ணுவார்கள், கட்டாயமாக காலை சிறிதுநேரம், மாலை சிறிது நேரம் அகத்தீசன் நாமத்தைச் சொல்லி நாமஜெபம் செய்வார்கள், அகத்தீசனைப் பூஜை செய்யும் பொழுது, "அடியேன் ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும்"; என்று அகத்தீசனை உருகி வேண்டிக்கொள்வார்கள், மேலும் சமுதாய நடைமுறை பழக்கவழக்கங்களை அறிந்து ஒப்புரவோடு நடந்துகொள்வார்கள், தம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நண்பர்கள் சிறுசிறு குற்றம் செய்தால் அதை அனுசரித்து நடந்துகொள்வார்கள், எப்போதும் நாட்டிற்குத் தொண்டுசெய்ய வேண்டும் என்று ஆர்வத்தோடு இருப்பார்கள், மற்றும் புனித நீராடுதல், கும்பாபிஷேகம் பார்த்தல் போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்ட மாட்டார்கள், மற்றவர்களை அதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபட்டால் அவர்கள் விருப்பம் என்று சொல்லி அதை தடுக்க மாட்டார்கள்.

Thursday 22 October 2009

உயிரை அறிந்தால் உடம்பை அறியலாம்

ராஜரிசி, சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,
தவத்திரு. ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தம் திருவாய் மலர்ந்து அருளிய ஞான உபதேசங்கள்

தடுங்கோள் மனத்தை! இருந்தபடி இருங்கோள்!

தடுங்கோள் மனத்தை! விடுங்கோள் வெகுளியை! தானம் என்றும்
இடுங்கோள்! இருந்தபடி இருங்கோள்! எழு பாரும் உய்யக்
கொடும் கோபச் சூருடன், குன்றம் திறக்க, தொளைக்க வை வேல்
விடுங்கோன் அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும்!


மனத்தை அடக்குங்கள்! கோபத்தை விடுங்கள்! தானத்தை இடுங்கள்! இருந்தபடி அமைதியாக இருங்கள்! இப்படி இருந்தால் ஏழு உலகம் உய்யும் பொருட்டு, கோபச் சூரனையும், மாயத் தாருகனையும், வேல் வீசிப் பிளந்தானே! அந்த முருகனின் அருள் உங்களுக்குத் தானாகவே வந்து வெளிப்படும்!

விரிவான பொருள்:

தடுங்கோள் மனத்தை : மனசைத் தடுக்கணும்! தன்னைத் தானே கொல்லும் நம் மனசைத் தடுக்கணும்!

விடுங்கோள் வெகுளியை : வீண் கோபத்தை விடணும்! உள்ளியது எல்லாம் உடன் எய்தும், உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்!

தானம் என்றும் இடுங்கோள் : பசித்தோற்கு பசியாற்றுதலே சிறந்த தானம் ஆகும்.

இருந்தபடி இருங்கோள் : முன்னேறுவதற்கு முன், அடக்க ஒடுக்கமாய், எளிமையாய் இருந்தியே! முன்னேறிய பின்னும், அதே போல், அடக்க ஒடுக்கமாய், எளிமையாய் இரு! முன்பு இருந்தபடி, இருங்கோள் என்கிறார்!

இப்படி இருந்தால்....
எழு பாரும் உய்ய : ஏழ் உலகும் உய்ய
கொடும் கோபச் சூருடன் : கோபச் சூரனையும்
குன்றம் திறக்க : அவன் தம்பி தாருகன், கிரெளஞ்ச மலையாய் நின்றானே! அவனையும் தொளைக்க : அவர்களைத் துளைக்க
வை வேல் விடுங்கோன் : கூர் வேலை விட்டவன், முருகன்!

அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும் : அவன் அருள், "தானே" உமக்கு வந்து வெளிப்படும்! நீ உன் சுயநலத்தின் பொருட்டு, உன் அறிவுக்குத் தீனி போட, பெரிது பெரிதாப் பேசி, கர்மா, ஹோமம், சாந்தி, அது இது-ன்னு எதுவுமே "தனியாகப்" பண்ண வேணாம்! இருந்தபடி இருங்கோள்! அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும்!

இருந்தபடி இருக்க, அடியேனை இருத்துவாய்! முருகா! முருகா!
மலை மிசை மேவும் பெருமாளே! என் மனம் மிசை மேவும் பெருமாளே!

Wednesday 21 October 2009

உன்னையும் மறப்பதுண்டோ

ரி.எம். சௌந்தரராஜனின் பக்திப்பாடல் - நல்லூர் கந்தசுவாமி கோயில் காட்சிகளை உள்ளடக்கிய படக்கோவையுடன்.

Tuesday 20 October 2009

தான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான் அகத்தீசர்

தான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான்
தர்மத்தின் வழிசொல்லிக் கருணை வைப்பான்
ஊன் என்ற மந்திரமே உபதேசித்து
உண்மையுடன் சுழிமுனையிலே இருக்கும் என்று
கோன் என்ற சிவரூபம் கண்ணில் காட்டி
கோபமென்ற முனைபோக்கி ஆசை போக்கி
நான் என்ற ஆணவங்கள் தன்னைப்போக்கி
நாட்டுவார் குருநாதன் மோட்சந் தானே.

-மகான் கொங்கண மகரிஷி 12-

மகான் கொங்கண மகரிஷி அருளிய கவியின் சாரம் :


மனிதன் எண்ணிலடங்கா பிறவிகள் எடுத்துள்ளான். ஆறுகளில் உள்ள மணல்களை எண்ணி கணக்கிட்டாலும், நமது பிறவியை கணக்கெடுக்க முடியாது. இத்தனை பிறவிகளிலும் காமத்தாலும், பொருள் வெறியாலும், ஜாதி வெறியாலும், மத வெறியாலும், நான் என்ற கர்வத்தாலும், தனக்குள்ள ஆள்படையாலும், கல்வி கற்றோம் என்ற கர்வத்தாலும், உத்யோக பெருமிதத்தாலும் அடாது பாவங்கள் செய்திருப்போம். இந்த பாவங்கள்தான் அறிவை மங்க செய்துவிடும். அதன் காரணமாக பாவம் எது? புண்ணியம் எது? என்று உணர முடியாது. அப்படியே அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் சொன்னாலும் நமது பாவத்தின் காரணமாக உணர முடியாது. மூர்க்கத்தனமே மிஞ்சி இருக்கும். இதுபோன்ற கொடுமைகள் எல்லாம் பல ஜென்மங்களில் செய்திருந்தாலும், ஆசான் அகத்தீசன் திருவடியை நம்பி தொடர்ந்து பூஜை செய்து வந்தால் பாவம் எது? புண்ணியம் எது? என்று உணர்த்துவார்கள்.

ஒரு மனிதன் பாவியாவதற்கு காரணம், மனைவியினுடைய இயல்பை அறியாமல் அவள்மீது சந்தேகப்படுதலும், அடிமைபோல் எண்ணி அடித்தலும், கொடுமையாக பேசுதலும், மேலும், கல்வி அறிவு இருப்பதால் உடன் பிறந்தவர்களின் சொத்தை அபகரித்தலும், மேலும் தாய் தந்தை நமக்கு செய்த உதவிகளை நன்றி மறந்துவிடுவதும், மேலும் நம்மிடம் வேலை செய்கிறவர்களுக்கு நியாயமான கூலி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமையும், பொருள் சேர்க்கும் பொழுது மற்றவர்கள் சொத்தை அபகரித்து கொள்ள வேண்டும் என்ற அறியாமையும்தான் பாவம் சேர்வதற்கு காரணங்கள் ஆகும். மேற்கண்ட பாவங்களைப் பற்றி ஆசான் அகத்தீசர் உணர்த்தியும், மேலும் பாவங்கள் செய்யாமல் இருப்பதற்குரிய பரிபக்குவத்தையும் ஆசான் நமக்கு அருள்செய்வார்.


மேலும், உடம்புதான் ஞானவீடு என்றும், இந்த உடம்பாகிய வீட்டை அறிந்து வீட்டை உறுதிபடுத்தி கொள்ளவும் ஆசான் அகத்தீசர் உபதேசிப்பார். அவர் உபதேசித்தபின் இந்த உடம்பில் பாவமும் புண்ணியமும் சேர்ந்தே அமைந்துள்ளது என்பதை உணர முடியும். மேலும், பாவமாகிய மும்மல தேகத்தை நீத்து புண்ணியமாகிய ஒளி உடம்பு பெற அருள்செய்வார். புண்ணிய உடம்பு பெறுவதற்கு இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகிய இயல்பை அறிந்து சுழிமுனையில் வாசி செலுத்தினால் அது ஓங்கார ரீங்காரமாக ஓசை உண்டுபண்ணி தசநாதமாக பின்பு விரிவடையும். மேலும், அமிழ்தமும் சிந்தும், ஜோதியும் தோன்றும். ஆசானே நம்முன் தோன்றி அருள்செய்வார். அதுமட்டுமல்ல கோபத்தால்தான் பல பிறவிகளில் பாவம் வந்தது என்று அறிந்து அந்த கோபத்தின் முனையையும் மழுங்கச்செய்துவிடுவார். அதுமட்டுமல்ல ஆசைதான் பிறவிக்கு காரணம் என்பதை அறிந்து மூலக்கனலை எழுப்பச் செய்து அந்த ஆசைகளை வேரோடு எரித்துவிடுவார். மேலும், கொடூரமான எண்ணங்கள் நீங்கி சாந்தம் உண்டாகும்.எனவே, ஆசான் அகத்தீசரை தினமும் "ஓம் அகத்தீசாய நம" என்று நாமஜெபம் செய்து வந்தால் முன்செய்த பாவங்களும் தீரும். ஊனாகிய உடம்பைப்பற்றி அறிகின்ற அறிவும் வரும். சுழிமுனைiயாகிய இரகசியமும் தெரியும். சிவவடிவாக உள்ள அகத்தீசன் நம்முன் தோன்றி காட்சி தருவார். மூர்க்கத்தனம் நீங்கி சாந்தம் உண்டாகும். இதுவ மேற்கண்ட பாடலின் சாரமாகும்.

Monday 19 October 2009

கந்தசட்டி கவசம் Kanthasaddi kavasam

கந்தசட்டி கவசம்

காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர சமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் முருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக

ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விபச சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென

வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்பரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றூந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

இறுதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா


பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலால் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக

அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமுந்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதும் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய


ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
திசைமன்ன ரண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளும் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேன பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!

கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவாய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!


O Lord, You who are six-faced,
with your six bejewelled crowns,
Your vibhuti-adorned foreheads and long eye-brows,
twelve eyes and ruddy lips,
You wear various pearled jewels.

With dainty earrings on Your twelve ears,
various flower garlands and diamonds,
pearled ornaments and nine-gemmed chains.

You wear the sacred investiture thread across
Your bejewelled chest and beautiful abdomen.

Your silken sash and girdle encircle Your full waist,
with a mini-gemmed diadem adorning Your silken robes.
Your beautiful legs and ankletted feet
produce a harmonious blend of melodious notes
most pleasant to the ear.

Segakana .. segakana .. segakana .. sekana ..
Moga .. moga .. moga .. moga .. moga .. moga .. mogana
Naga .. naga .. naga .. naga .. naga .. naga .. nagana
Digukuna .. digu .. digu ..digukuna .. dikuna
Ra .. ra .. ra .. ra .... ra .. ra .. ra .. ra ....
ra .. ra .. ra .. ra .... ra .. ra .. ra
Ri .. ri .. ri .. ri .... ri .. ri .. ri .. ri ....
ri .. ri .. ri .. ri .... ri .. ri .. ri
Du .. du .. du .. du .... du .. du .. du .. du ....
du .. du .. du .. du .... du .. du .. du
Dagu .. dagu .. digu .. digu .. dangu .. dinguku

O Rider astride the Peacock, come quickly!
O Lord of the three letters (Mu-Ru-Ga), come!
O Lord who resides in Swamimalai (Eragam)
and grants Darshan from therein,
grant me, Your child, Your favour.

I turn to You for salvation and prostrate before
Your Holy Feet in submission, protect me,
O Lord, for my life is but Your own.

With Your twelve eyes, protect Your child ...
Protect the face .. O Beautiful Vel.
Protect the vibhuti adorned forehead .. O Pure Vel.
Protect the two eyes .. O Shining Vel.
Protect the two ears .. O Lord of the Vel.
Protect the two nostrils .. O Good Vel.
Protect the mouth .. O Great Vel.
Protect the thirty-two teeth .. O Piercing Vel.
Protect the tongue .. O Perfect Vel.
Protect the two cheeks .. O Brilliant vel.
Protect the neck .. O Sweet Vel.
Protect the chest .. O Bejewelled Vel.
Protect the shoulders .. O Sharp Vel.
Protect the nape .. O Great Vel.
Protect the back .. O Vel of Grace.
Protect the sixteen rib bones .. O Youthful Vel.
Protect the stomach .. O Ever Victorius Vel.
Protect the slender waist .. O Perfect Vel.
Protect the umbilicus .. O Benevolent Vel.
Protect the organs of reproduction and excretion .. O Good and Beautiful Vel.
Protect the two thighs .. O Great Vel.
Protect the knees and calves .. O Bright Vel.
Protect the toes and feet .. O Vel of Grace.
Protect the two hands .. O Vel of Mercy.
Protect the two forearms .. O Strong Vel.

Grant that Lakshmi resides in my arms.
May Saraswathi abide in my speech
and may my Hridya Kamalam
(The ten-petalled lotus of the heart; the Jivatma's abode.)
be protected by the Benevolent Vel.

May Ida, Pingala and Sushumna (nerve currents)
be protected by the Victorious Vel.
For as long as my tongue can utter Your name
(for as long as I'm alive),
May Your Golden Vel come
with the speed of lightning to protect me.

May Vachiravel protect me each day and night, everyday.
May He Protect me in the early hours of the night,
mid-hours of the night and pre-dawn hours.
During dawn and dusk, protect me, O Very Vigilant Vel.

Without any delay, come O Golden Vel to grant protective assistance.
Throw Your merciful glance towards me
and may Your look destroy my sins.

May You, O Lord, protect one from ghosts, spirits and demons.
(Reference is made to the different kinds of devils and spirits
i.e. spirits that swallow infants, spirits and devils that follow maidens,
the guardians of cemetries and spirits of the forests, etc.).

At the mention of my name,
may these take to their heels with the speed of lightning.

(The following refers to charms, spells and the practice of black magic).
May those who indulge in these shudder at the mention of my name,
for I am Your devotee and servant,
and may they in humility bow before me,
for You are my Lord and protector.
May my love for You keep them in chains,
May they shiver in fear, roll in agony, scream in terror
and flee in utter fear of me.

Protect me, O Lord, from the attacks
of tigers, foxes, wolves, rats and bears.
May these flee in fear on sight of me.
May I be relieved from poisons
of centipedes, snakes and scorpions,
(if these deem to bite me).

May ailments such as sprains, strains, migraine, rheumatism,
disease due to excessive bile, fits, stomach ailments, lethargy,
skin disease, aches and pains, toothaches
and various other ailments of undefinable source,
cease by Your Grace.

Grant me, O Lord, good relationship with all the fourteen worlds.
May both men and women be pleased with me.
May the Ruling Sovereign be pleased with me,
I who adore Thy Great Name.

You who originated from the waters of Saravana,
O Lord of the Vel, who enshrined its brightness,
whose Holy Feet are adorned with the melodious 'Silambu' (anklets)
and who severs the cords, of Samsaric birth.
Nephew of Vishnu and Lakshmi,
who helped the Devas to protect the city of Amarapathi,
Lord Kantha, Lord Guha, O Lord of the Brilliant Vel.
You who was nurtured by the Karthigai maidens
and who wears the garland of the Kadamba flowers,
Lord, who with Your sweet Vel destroyed Idumban.
O Lord of Thiruthani, Son of Siva,
O Lord of Kathirgamam, weilder of the Brilliant Vel.

O youthful Lord who abodes in Palani.
O Lord of Thiruvavinangkudi, Dweller of the Lovely Vel.
O Lord of Thiruchendur, who is adored as Sengalvaraya,
O Lord of Samarapuri, also known as Shanmuga.

For as long as the beautiful Saraswathi,
who has dark tresses, guards my tongue,
I shall sing thy Name, O Lord and Father,
I sang and danced, I danced and I sang in ecstasy.
I searched and longed for You from Thiruvavinankudi,
that I might, with Love, use this vibuthi which is your Prasadam.
That I might, with Your Grace, break off from the bonds of Maya
and attachment and attain to Thy Lotus Feet.
Bless me O Lord Velayuthan, with Love,
that I might be showered with plenty and live graciously.
Hallowed be the Rider of the Peacock!
Hallowed be the sharp Vel in His hands!
Hallowed be He who dwells in hilly abodes!
Hallowed be He with Valli!
Hallowed be He who has the cockerel as emblem on His flag!
Hallowed be He and may my poverty cease.

O Lord, whatever my shortcomings or failures,
You as my Father and Guru, forgive me for them and bear with me.
Valli is but Mother, thus as parents, look upon me
as Your child, be pleased with me and shower me
with Your Love and Blessings.

He who meditates on this Kavasam daily,
Both morning and evening, after cleansing,
who meditates with concentration and devotion on the Kavasam and its meaning,
reciting thirty-six times daily and who uses the vibuthi of the Lord,
will attain therein these benefits:
The Devas of all eight directions will bless him.
Enemies too will bow to him.
The Nine Planets will be pleased and will confer blessings.
He will be blessed with the sixteen 'wealths' at all times.

This Kandha Shashti Kavasam
which is equivalent to Lord Murugan's Vel,
even if recited and used as a path,
will confer great spiritual blessings on the aspirant
- Truth, Knowledge and Bliss will shine.
Devils would not dare approach these devotees of the Lord,
the evil will meet its due, while in the hearts of the good,
the Feet of Murugan shall ever dance ...

You who have understood my heart, of all the Lakshmis,
You have given new vigour to Veera Lakshmi.
With the hands that killed Soorapadman,
You have graced the twenty-seven Devas by granting them
the gift of Divine Honey (Elixer).

You Lord, have the ability to grant Moksha (Liberation from rebirth)
and who as Guru Paran gave upadesha to Lord Swami (Lord Siva) Himself.
You, who resides in the Temple of Palani Hills as a child,
at Your Little Holy Feet I prostrate.

O Lord of the Vel, You who have stopped and enslaved me;
whose loving form has entered my heart and blessed me,
Praise be to Thee!

O Lord General of the Devas, Praise be to Thee!
O Lord who captivated Valli, Praise be to Thee!
He whose form is strong and dazzling, Praise be to Thee!
He who conquered Idumba, Praise be to Thee!
He who wears the Kadamba flowers (Kadamban), Praise be to Thee!
He who is known as Kandha (Skanda), Praise be to Thee!
O Lord of the Vel, who is garlanded with Vedchi flowers, Praise be to Thee!
O Lord King of the Mountains, Praise be to Thee!
I surrender at the Lotus Feet of the Lord who rides the Peacock.
I surrender to Thee Lord Saravanabava (OM).
I surrender to The Lord Shanmuga.

ஞானபண்டிதர் அருள்வேண்டி...

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
Thiruppugal or Tiruppukazh literally means "Glory to the Lord" or Divine Glory.


அருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் சென்னைக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.

இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர்.

Sunday 18 October 2009

கந்தசட்டி ஆரம்பம்...



அகத்தியருக்கு ஆசி வழங்கி தமிழைத் தந்தவனே
உன் வழிவந்த இனம் வாடுதய்யா வழியின்றி
எழுவாய் வருவாய் குருவாய் அருள்வாய்
தீயவரை அழித்து தமிழைக் காத்திடுவாய் குகனே.