அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் Thiruppugal or Tiruppukazh literally means "Glory to the Lord" or Divine Glory.
அருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் சென்னைக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.
இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.
அகத்தியருக்கு ஆசி வழங்கி தமிழைத் தந்தவனே;
உன் வழிவந்த இனம் வாடுதய்யா வழியின்றி;
எழுவாய் வருவாய் குருவாய் அருள்வாய்;
தீயவரை அழித்து தமிழைக் காத்திடுவாய் குகனே.
-**********************
நிலையற்றதை நிலையென நினைக்குது மனம்;
அலைகிறேன் அல்லும் பகலும் அதற்கே தினம்;
சிலை நீயென பால் தேனாகி விரையம் பணம்;
கலையாதா இந்த உனக்கொவ்வாத மூடத்தனம்.
No comments:
Post a Comment
உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.