Thursday 8 July 2010

ஆய கலைகள் அறுபத்து நான்கு

1. அக்கரவிலக்கணம் - எழுத்திலக்கணம்
2. இலிகிதம் - எழுத்தாற்றல்
3. கணிதம் - கணிதவியல்
4. வேதம் - மறை நூல்
5. புராணம் - தொன்மம்
6. வியாகரணம் - இலக்கணவியல்
7. நீதி சாஸ்திரம் - நய நூல்
8. ஜோதிடம் - கணியக் கலை
9. தர்ம சாஸ்திரம் - அறத்துப் பால்
10. யோக சாஸ்திரம் - ஓகக் கலை
11. மந்திர சாஸ்திரம் - மந்திரக் கலை
12. சகுன சாஸ்திரம் - நிமித்தகக் கலை
13. சிற்ப சாஸ்திரம் - கம்மியக் கலை
14.வைத்தியசாஸ்திரம் - மருத்துவக் கலை
15. உருவ சாஸ்திரம் - உறுப்பமைவு
16. இதிகாசம் - மறவனப்பு
17. காவியம் - வனப்பு
18. அலங்காரம் - அணி இயல்
19. மதுர பாடனம் - இனிதுமொழிதல்
20. நாடகம் - நாடகக் கலை
21. நிருத்தம் - ஆடற் கலை
22. சத்தப்பிரும்மம் - ஒலிநுட்ப அறிவு
23. வீணை - யாழ் இயல்
24. வேணு (புல்லாங்குழல்)- குழலிசை
25. மிருதங்கம் (மத்தளம்)
26. தாளம் - தாள இயல்
27. அத்திரப் பரிட்சை - வில்லாற்றல்
28. கனகப் பரிட்சை - (பொன் நோட்டம்)
29. இரதப் பரிட்சை - (தேர் ஏற்றம் )
30. கஜப் பரிட்சை - (யானை எற்றம்)
31. அசுவப் பரிட்சை - (குதிரை ஏற்றம்)
32. இரத்தினப் பரிட்சை - மணி நோட்டம்
33. பூமிப் பரிட்சை - மண்ணியல்
34. சங்கிராம விலக்கணம் - போர்ப் பயிற்சி
35. மல்யுத்தம் - கைகலப்பு
36. ஆகருடனம் (ஆகர்ஷணம்)- கவர்ச்சியியல்
37. உச்சாடனம் - ஓட்டுகை
38. வித்து வேடனம் - (நட்பு பிரிக்கை)
39. மதன சாஸ்திரம் - மதன கலை
40. மோகனம் - மயக்குக் கலை
41. வசீகரணம் - வசியக் கலை
42. இரசவாதம் - இதளியக் கலை
43. காந்தருவ வாதம் - (இன்னிசைப் பயிற்சி)
44. பைபீலவாதம் - (பிறவுயிர்மொழி)
45. கவுத்துவ வாதம் - மகிழுறுத்தம்
46. தாதுவாதம் - ( நாடி சாஸ்திரம்)
47. காருடம் - கலுழம்
48. நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது இழப்பறிகை)
49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்;மறைத்ததையறிதல்)
50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்--வான் செல்கை)
51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது--வான்புகுதல்)
53. அதிரிசியம் - தன்னுறு கரத்தல்
54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55. மகேந்திர ஜாலம் - பெருமாயம்
56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்--அழற் கட்டு)
57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்)
58. வாயுஸ்தம்பம் - வளிக் கட்டு
59. திட்டி ஸ்தம்பம் - கண் கட்டு
60. வாக்கு ஸ்தம்பம் - நாவுக் கட்டு
61. சுக்கில ஸ்தம்பம் - (விந்தையடக்கல்)
62. கன்னத்தம்பம் - புதையற் கட்டு
63. கட்கத்தம்பம் - வாட் கட்டு
64. அவத்தைப் பிரயோகம் சூனியம்

தமிழ்ச்சித்தர் கண்ட வியக்க வைக்கும் மருத்துவம்

பகுதி 1



பகுதி 2


பகுதி 3



பகுதி 4



பகுதி 5

Wednesday 7 July 2010

முருகனை நினை மனமே!

பாடல்வரி, இசை, குரல் : இசைஞானி இளையராஜா


முருகனை நினை மனமே! - நலங்கள்
பெருகிடும் தினம் தினமே!
உருகிடும் மறு கணமே! - நெருங்கி
வருவது அவன் குணமே! (முருகனை)

ஒவ்வொரு நொடியிலும் அருகினில் இருப்பவன்!
ஒவ்வொரு செயலிலும் பெருமையைக் கொடுப்பவன்!
உடலுக்கு உயிரெனில் உயிருக்கு ஒளி அவன்!
உணர்ந்தவர் தொழுதிடும் உயர்ந்தவர் பரவிடும் முருகனை...

அழகனின் அழகினில் இருவிழி குளிர்ந்திடும்!
அவன் விழி அசைவினில் கணைகளும் மலர்ந்திடும்!
அவன் அருள் மழையினில் உணர்வுகள் சிலிர்த்திடும்!
அறிவுடன் பொருள் புகழ் அனைத்திலும் சிறந்திட முருகனை ...

Monday 5 July 2010

தமிழ் சித்தர் மொழி; தமிழர் நெறி சித்தநெறி

தமிழ் மொழி சித்தர்கள் மொழி. சித்தர்களால் உருவாக்கப்பட்டு இன்றும் அவர்களாலேயே வளர்கப்பட்டு வருகின்றது. முற்றுப்பெற்ற ஞானிகளான சித்தர்களின் உயர்மொழி தமிழ். ஆதாலால், அது ஞானமொழியென்றும், மலங்கள்(கசடு/குறை) நீங்கிய அமுதமொழியென்றும் அழைக்கப்படுகின்றது. இதற்கு திருச்சி, துறையூர் ஓங்காரக் குடில் சான்று பகரும்.

"கல் தோன்றி மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி"

“கல் தோன்றி மன் தோன்றாக் கால மூத்தகுடி” இந்தக் கூற்றை பலரும் தவறாக கல்லும் மண்ணும் தோன்றாக் காலமென்கின்றனர். ஆனால், "கல் தோன்றி" அஃதாவது கல்விமுறைகள் தோற்றம் கொண்ட, "மன் தோன்றா" அஃதாவது ஆட்சிமுறைகள்(மன்னராட்சி) தோன்றாக் காலத்தில், "வாளோடு" அஃதாவது வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம். உலகத்தில் தோன்றிய மூத்தமொழி தமிழ் என்பதே இதன் விளக்கம். உலகமொழிகளுக்கே தாய்மொழி.

தமிழர்நெறி சித்தநெறியே யன்றி இந்துத்துவமல்ல. உலக அறங்களுக்கு மூத்தது சித்தநெறி. இந்து என்பது சமயமோ மார்க்கமோ மதமோவல்ல. அது ஓர் நாகரீகம். சிந்துவெளி நாகரீகமே காலப்போக்கில் திரிந்து இந்து என்றாகிவிட்டது.

சித்தர்கள் தந்த தமிழ்

தமிழ் தந்து கோடி யுகங்கள் தாண்டியும் இன்றும் யோதிவடிவாக வாழ்கிறார்கள் சித்தர்கள். சித்தர்கள் மொழியே தமிழ்மொழி. சித்தர்கள் கோடியுகம் வாழ்ந்தால் தமிழும் கோடியுகங்கள் வாழ்வதாகக் கருதமுடியும். இது பலரதும் புருவத்தை நம்பமுடியாமல் உயர்த்தவே செய்யும். தமிழ் பேசவல்ல சித்தர்கள் ௯(9) கோடி இருப்பதாக சித்தநூல்களில் கூறப்பட்டுள்ளது. சித்தர்கள் தந்த தமிழில் இல்லாதது ஒன்றுமில்லை. விளையாட்டாக வெளிநாட்டவர் ஒருவர் அப்ப மயிர்பற்றி சித்தர்கள் தமிழில் உள்ளதா எனக்கேட்க, உண்டெனக் கூறி தமிழறிஞர்கள் ஆயிரம் உதாரணம் காட்ட அசந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.


உதாரணத்திற்கு:-

தலை முடி கறுக்க:

"எண்ணெய் இட்டு முழுகும் பொது
நெல்லிமுள்ளி யெடுத்து பாலில் ஊறவைத்து
அரையப்பா அரைத்து போட்டு முழுகு"

நெல்லிமுள்ளியை எடுத்து பாலில் ஊறவைத்து அரைத்து எடுத்துஇ எண்ணெய் தேய்த்து முழுகும் போது தலையில் தேய்த்து முழுகினால் தலை முடிகறுக்கும்.


"தலை நரைக்கு மாத்து பொன்பருத்தி
யிலைச் சாறு தேச்சு முழுவு கறுப்பாம்".

பொன்பருத்தியிலைச் சாறெடுத்து தலையில் பூசி முழுக நரை முடி கறுக்குமாம்.

சித்தர்கள் அறிந்திராத கலையெதுவுமில்லை. 64 கலைகளையும் தாண்டி 65வது கலையாகிய சாகாக்கலையையும் அறிந்திருந்தனர். இன்றும் இவர்கள் யோதிவடிவாக வாழ்கிறார்கள் என நம்பப்படுகிறது. அகத்தியர், திருவள்ளுவார், 150 வருடங்களுக்கு முன் வாழ்ந்த வடலூர் வள்ளலார் வரை அனைவரும் சித்தர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அய்யன் வள்ளுவர் அருளிய திருக்குறளில் துறவறவியல் பகுதியில் அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஆகிய 13 அதிகாரங்களில் ஞானக்கருத்துக்கள் உள்ளன. அதிலொரு சில குறள்கள் மட்டும் எடுத்துக்காட்டுகிறோம்.


(எ.கா)

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. (குறள் : 345-துறவு)

ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு. (குறள் : 357-மெய்யுணர்தல்)

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. (குறள் : 358-மெய்யுணர்தல்)

சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்
சார்தரா சார்தரும் நோய். (குறள் : 359-மெய்யுணர்தல்)

திருவள்ளுவர் திருக்குறளை மட்டும் அருளவில்லை. அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள் எண்ணற்றவை. இனி வரும் ஞானச்சித்தர் காலத்தில் இவை மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்களில் சில :

1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. ரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல - 100
8. வைத்திய சூத்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூத்திரம் - 30
11. வாத சூத்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51

(இவர்கள் அருளிய நூல்கள் இன்னும் இருக்கலாம்)

சித்தர்கள் வகுத்த தமிழ் எண் வடிவங்கள்

தமிழ் எண்கள்




* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)


தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்

ஏறுமுக எண்கள்
**************
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

இறங்குமுக எண்கள்
*****************
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்
----------------
நீட்டலளவு
**********
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்
************
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்
*****************
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு
*************
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு
*************
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி.


சித்தர்கள் வகுத்த காலக் கணிப்பு - Lunar metrics of Siddha(Ciththars/Masters)

Thamil & Sanskrit are languages of Ciththars(Siddha/Masters). Both languages were created & developed by Ciththars. It's Ciththars who developed lunar metrics of years.








-தொடரும்-

என் அன்பிற்கினிய உறவுகளே! அடியேனும் தமிழ்த் தேடலின் போது கிடைக்கப்பெறும் தகவலைத் தொடர்ந்து பகிர்கிறேன். என் மொழி என்பதால் சொல்லவில்லை. எங்கள் மொழி 1000/2000/5000 ஆண்டுகள் பழமை வாயந்ததல்ல. கோடி யுகங்கள் பழமை வாய்ந்தது. அதற்குரிய ஆதாரங்களைத் தேடுவதே என் பிறப்பின் பணியாக ஏற்றுத் தேடலில் இறங்கியுள்ளேன். உங்கள் ஆதரவையும் வேண்டி நிற்கிறேன். நன்றி.



ஓங்காரக்குடில் - துறையூர்
113 நகர் விரிவாக்கம்
துறையூர்
திருச்சி - 621010
தொடர்பு இல. : (0091) 04327-255684, 255184