Monday 10 May 2010

ஆரியன் யார்? பிராமணன் யார்?

ஆரியன் யார்? பிராமணன்/அந்தணன் யார்?

சாதாரண மானிடர்கள் தங்களை ஆரியர் அல்லது பிராமணர் என்று வகைப்படுத்துவது தவறானது. அதற்கு அவர்கள் அறியாமையே காரணம். அறவழி நின்று முற்றுப்பெற்ற சித்தர்களே(ஞானிகள்) பிராமணர்கள் ஆவார்கள். இவ்வாறு முற்றுப்பெற்ற ஞானிகள்/சித்தர்களே ஆரியர்கள் என்றும் அழைக்கப்படுவர். சாதாரண மனிதர்களை ஆரியர்கள் என்று வகைப்படுத்தல் தவறானது.


கடவுளை அறநெறியில் நின்று இறைவனை அடைந்தவனே அந்தணன்/பிராமணன்/சித்தன் ஆவான். மந்திரங்ளைக் கற்று பூஜை செய்பவர்கள் வெறும் பூசாரியன்றி தம்மைத் தாமே முற்றுப்பெற்ற பிராமணன் அல்லது அந்தணன் என்று அழைப்பது மகாகுற்றமாகும்.

யார் பிராமணன் அல்லது அந்தணன் ஆகலாம்?

பெறுதற்கரிய பிறப்பாகிய மானிடப்பிறப்பைப் பெற்ற அனைவருக்கும் தகுதியுண்டு. 'கு” ஆகிய இருளை நீக்கி “ரு” ஆகிய வெளிச்சத்தைக் காட்டக்கூடிய முற்றுப்பெற்ற 'குரு”வாகிய ஞானிகள்/சித்தர்கள் காட்டும் வழியைக் கடைப்பிடிப்போர் யாரும் பிராமணன்/அந்தணன் ஆகலாம்; சித்தன்/ஞானி ஆகலாம்; இறைவனை அடையலாம். பிறப்பால் மனிதர் யாரும் பிராமணன்/அந்தணன் ஆக முடியாது.

மானிடனாகப் பிறந்து பிராமணன்/அந்தணன்/சித்தன்/ஞானி ஆனோர் எவரும் உண்டோ?!

ஆம். கோடான கோடிப்பேருண்டு. பல யுகங்களிலும் மானிடராகப் பிறந்து ஞானியாகியுள்ளனர்.

உ+ம்:

ஆசான் அகத்தீசர்
ஆசான் நந்தீசர்
ஆசான் திருவள்ளுவர்
ஆசான் ஒளவையார்
ஆசான் மஸ்தான்
ஆசான் பீர்முகமது
ஆசான் இயேசுபிரான்
ஆசான் கௌதமர்
ஆசான் பூணைக்கண்ணார்
ஆசான் மாணிக்கவாசகர்
ஆசான் வள்ளலார்
.... போன்ற எண்ணிலா கோடிப்பேர்.

1 comment:

  1. தனபால்18 May 2010 at 09:38

    தனபால்
    அருமையான பதிவு.
    தலைப்பைப் பார்த்தவுடன் "ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் வந்தார்கள்" என்பது பொய்க் கருத்து என்பதைப் பற்றி கூறப் போகிறீர்கள் என்று நினைத்தேன்.

    ReplyDelete

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.