Saturday 29 May 2010

சித்தர் மருத்துவம் - 1

புளிச்சிறு கீரை

“தேக சித்தியாருஞ்சிறு காசம் மந்தமுறும்
யோகமுறும் விந்துவிநற்புஷ்டியுண்டாம் - வாகாம்
வெளிச்சிறுமான் நோக்கு விழிமென் கொடியே நாளும்
புளிச்சிறு கீரையிணும் போது”


புளிச்சிறு கீரையை காச்ச கீரையென்றும் கூறுவர். இக்கீரையால் சிறு இருமலும் மந்தமும் நீங்கும். காய சித்தியும் புணர்ச்சியில் விருப்பமும் உண்டாகும்.

இரத்த பித்த ரோகம், கரப்பான் வீக்கம், எலும்புச் சுரம் ஆகியன நீங்கும்.


காட்டுக் கடுகு

"வாதம் உடற்கடுப்பு வன்சூலை காதிரைச்சல்
ஓதமிகு பிநிசம் ஓடுங்காண் - போதெறிந்து
காய் வேளைக் காயும் விழிக் காரிகையே!
நாய் வேளையுண்ண நவில் வையமிதில்"


காட்டுக் கடுகின் இலையை வெந்நீர் விட்டுக் கசக்கிப் பிழிந்த சாற்றில்
இரண்டொரு துளி காதில்விட காது நோய் குணமாகும்.

வாதம், உடல் கடுப்பு, வன்சூலை, பீநிசம் ஆகிய நோயெல்லாம் இம்மூலிகையால் குணமாகும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.