Sunday 13 December 2009

கடவுளைக் கல்லாக்கிய கயவனே



ஓ! மனிதா!!!

கடவுளைக் கல்லாக்கிய கயவனே
பிள்ளையை வாட விடும் மூர்க்கனே
ஆத்மா இருக்குமிடம் ஆலயமன்றோ
தானம் தவத்தை விட உயரந்ததன்றோ
பாலும் தேனும் உயிரற்ற கல்லுக்கு
பாலகனான உயிருள்ள கடவுளோ பட்டினியில்
கங்கையிலே மூழ்கிப் புண்ணியமில்லை
கால் வலிக்க தலம் சுற்றியும் புண்ணியமில்லை
பசியாற்றுதலே சிறந்த இறைத்தொண்டு
பசிப்பிணி நீக்குவிர் புண்ணியம் பெறவே
அன்புதான் சிவம் கருணைதான் இறை
இவன் வயிற்றை இன்றே நிறை
பசியாறறுவீர் மானுட தர்மம் காப்பீர்.

-சூர்யா-

No comments:

Post a Comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.