Thursday 3 December 2009

பகுத்தறியுமின் பகுத்தறிவைப் பகுப்பின்றி!

ஆக்கம்:
-சூர்யா-


பகுத்தல் 1

இன்று பகுத்தறிவாளர்கள் எனக் கூறிக்கொள்வோர் பகுத்தறிந்து எதையும் கூறுகிறார்களா என்று பகுத்தறிய எனக்குப் பகுத்தறிவு உண்டா என என் பகுத்தறிவை நானே பகுத்தறிவதற்கு எனக்குப் போதுமான பகுத்தறிவு இருக்கா? இல்லையா? என்பதை யாமறியோம்.

கடவுள் மறுப்பு, சாதி பேதமற்ற சமூகம், யாவரையும் சமமாக பார்க்கும் எண்ணங்களே ஆரம்பகால தமிழ்நாடு, ஈழத்துத் தமிழ்ப் பகுத்தறிவாளர்களின் கருப்பொருட்களாக இருந்துள்ளன. இவை எவற்றிலும் குறையில்லை, குற்றமுமில்லை என்றே அடியேனின் பகுத்தறிவு பகுத்து என் உளமுள் புகுத்துகின்றது. ஆனால், இந்தப் பகுத்தறிவாளர்கள் தாம் பகுத்த பகுப்பை பற்றிப் பிடித்து தான், தன் குடும்பம், தான் சார்ந்த சமூகம் கடைப்பிடிக்க எவ்வளவிற்கு முயன்றுள்ளார்கள் என்பது கேள்விக்குறியது? இந்தப் பகுத்தறிவு தமிழர்களின் வாழ்வில் ஏற்படுத்திய நன்மை, தீமைகள் எவை?

அந்தக் கேள்விகளை உங்கள் பகுத்தறிவிற்கு விட்டு இந்தப் பகுத்தலை முடித்து மிக விரைவில் இன்னுமோர் பகுப்பில் சந்திக்கிறேன். நன்றி!

-பகுத்தல் 1 முற்று-
பகத்தறிந்து தொடர்ந்து பகுப்போம்...... பதிவு தொடரும்...

அறிந்திட
மனித நேய மாண்பாளர் வள்ளலார்

No comments:

Post a Comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.